Saturday, November 24, 2012

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

கல்யாணத்தில் தாலி கட்டும் பொழுது சொல்லும் ஹிந்து சமய திருமண மந்திரத்தின் பொருள் பெரும்பாலனவர்களுக்கு தெரிவதில்லை.
அதன் பொருள் என்னவென்றால்..

about-thaali-hindu-festivals-marriage-photo

''மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! -என்று புரோகிதர் சொல்வார்,அதாவது..,

மங்கலத்தின் மறு பெயர் கொண்ட மங்கலமான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து, உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு/நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் ஜீவனம் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டி இந்த புனிதமான திருமாங்கல்யச் சரடை உனக்கு அணிவிக்கிறேன். இந்த உலகே மெச்சும் நல்ல துணையாளாக, அணைத்து இன்ப, துன்பங்களிலும், சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று, நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வாயாக. என்பதே இந்த மந்திரத்தின் பொருள். 
நன்றி ! பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்

2 comments:

  1. அருமையான விளக்கம்.மிக்க நன்றி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி....Thava Kumaran

    ReplyDelete