Wednesday, May 8, 2013

சென்னைக்கு காந்தி


ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தாராம் காந்தி.

mahatma gandhi pictures

மீட்டிங்கில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது .
அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு
கடிதம் எழுதினார். உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம் . இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில் அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு ,நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுடைய ( ஆங்கில) மொழியிலேயே பேசினீர்களே!! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார்.

இதைப் படித்த காந்தி சொன்னார் ." என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது ?".

பாரதியும் விட்டுவிடவில்லை , ' தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த மொழியை என் தேசத் தந்தையைத் திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் " என்றாராம்!!

No comments:

Post a Comment